முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வுகள் எமது ஊரில் மிகவும் எழுச்சியோடு நடை பெற்றது

ஓர் ஆண்டுக்கு முன்னர் ஈழத்திலே சிங்கள வெறியர்களால் தமிழினம் அழிக்க பட்ட போது கொதித்தெழுந்து தன்னுடைய தேக்கு மர தேகத்தை தீக்கு தின்ன கொடுத்த மாவீரன் முத்துக்குமார் உட்பட 19 வீர தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்வுகள் மிகவும் எழுச்சியோடு நடை பெற்றது.


குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியத்தில் தக்கலை பேருந்து நிலையத்திற்கு முன்புறம் தக்கலை ஒன்றிய மதிமுக செயலாளர் அழகை J.P . சிங் தலைமையில் முத்துக்குமார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழ் ஈழம் மலரும் வரை போராட உறுதி எடுத்து கொண்டனர். ஏராளமான மதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழ் இன ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் .


இதை தொடர்ந்து மதிமுக இளைஞர் அணி சார்பாக குமார புரம் சந்திப்பில் முத்துக்குமார் படத்திற்கு இளைஞர் அணியினர் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வீரவணக்க நிகழ்வு பொதுக்கூட்டம் நடை பெற்றது . இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார் . கூட்ட்டத்திற்கு தக்கலை ஒன்றிய செயலாளர் , குருந்தன் கொடு ஒன்றிய செயலார் , குளச்சல் நகர செயலாளர் மற்றும் நிவாகிகள் கலந்து கொண்டனர் . தலைமை கழக பேச்சாளர் சிலம்பை டென்னிசன் சிறப்புரையாற்றினார் .

கடையில ஒரு ருபாய் வெளிய பத்து ருபாய்

இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்க்கும் போது சாதாரண மனிதர்கள் இனி கனவு கூட காண முடியாது போலிருக்கிறது. ஏழைகளுக்கு மாடி வீடு என்பது கானல் நீராகி கொண்டிருக்கிறது கட்டுமான பொருட்களின் விலையுயர்வு. சரி வீடு தான் இல்ல ஒரு ரூபாய்க்கு அரசு அரிசி போடுதே அதன் மூலமா சாப்பாட்டு தேவையாவது பூர்த்தியாகும் என பார்த்தால் அது கூட இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 10 - 15 ரூபாய்க்கு நல்ல அரிசி கடைகளில் கிடைத்து வந்தது இப்போ என்னவோ தெரியவில்லை குறைந்த பட்சம் கடைகளில் 28 ரூபாய்க்கு தான் அரிசி கிடைக்குது.

என்னவோ விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் ஏறி கொண்டே தான் இருக்கும் என வைத்து கொண்டாலும் அது சில சதவீதங்கள் தான் ஏறும். ஆனால் இன்றைய சூழ்நிலை பல மடங்குகள் ஏறியிருக்கிறது. அதே போல் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை . மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு லட்சத்திற்கு நிலம் வாங்கலாம் என்று பணம் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு லட்சத்திற்கு பதிலாக ஐந்து லட்சம் பணம் சம்பாதித்து சொத்துக்கள் வாங்கலாம் என்று பார்த்தால் இப்போதைய விலை நிலவரம் ஐந்து லட்சத்திற்கு பதிலாக ஐம்பது லட்சமாக மாறியிருக்கிறது . இப்படிப்பட்ட நிலையில் நடுத்தர மக்களின் வாழ்வாதாரமே உடைந்து போயிருக்கிறது. அப்படிஎன்றால் ஏழை மக்களின் நிலை என்ன?

வசதியோடு வாழ்ந்தவன் இப்போதும் வசதியோடு தான் வாழ்கிறான் ஏழை இப்போதும் ஏழையாகவே தான் இருக்கிறான். மூன்று ரூபாய்க்கு ரேசனில் அரிசி விலை இருந்த போது கள்ள மார்கெட்டில் நான்கு ருபாய் ஐம்பது காசுக்கு விற்றார்கள் . இப்போது ரேசனில் ஒரு ருபாய் ஆனால் கள்ள மார்கெட்டில் எட்டு ருபாய் முதல் பன்னிரண்டு ருபாய் வரை இருக்கிறது.

இதே போல தான் ஒவ்வெரு பொருட்களும் பல மடங்குகள் விலை உயர்ந்துள்ளது . நாளை நாம் நல்ல சாப்பாடுடன் நல்ல உடைகளுடன் கனவு கண்ட நடுத்தர ஏழை குடும்பங்கள் இன்றும் கனவுகளோடு வாழ்வது தான் கொடுமை. பத்து ருபாய் சம்பளம் கூடினால் இருபது ருபாய் அடிப்படி தேவைக்கான செலவு கூடுகிறது.

மத்திய அரசாக இருந்தாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி விலைவாசி உயர்வை கட்டு படுத்த உருப்படியாக எந்த கொள்கை முடிவுகளும் எடுக்க வில்லை. மக்கள் இப்போதும் ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்ற பட்டு வருகிறார்கள் .


முல்லை பெரியாறில் தமிழர் உரிமை காக்க வைகோ தலைமையில் உண்ணாவிரதம்

முல்லை பெரியாறில் தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய ஆணை கட்ட முதற் கட்ட பணிகளை துவக்கிய கேரள அரசையும் , ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய தமிழர் விரோத காங்கிரஸ் அரசையும் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் மதுரையில் நாளை மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

ஏற்கனவே மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த திமுக பின்னர் ராஜாவின் ஷ்பெக்ட்ராம் ஊழலை மத்திய காங்கிரஸ் அரசு சிபிஐ மூலமாக விரைவு படுத்தி திமுக மத்திய அமைச்சர் ராஜாவின் அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை செய்தார்கள் . இதையடுத்து கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துவதிலிருந்து விலகி கொண்டது திமுக. இப்படி ஊழல் விவகாரங்களுக்காக மக்கள் நலனை காற்றில் பறக்க விடும் திமுக அரசையும் கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் முக்கியமானதாக கருத படுகிறது .

தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்டங்கள் முல்ல்லை பெரியாறை நம்பி தான் விவசாயங்கள் இருக்கிறது . கேரளா அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என வீண் புரளிகளை கிளப்பி விடுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் , இந்திய இறையாண்மையை பற்றியும் கவலை படாமல் செயல் பட்டு வருகிறது . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருந்த வழக்கு தற்போது தமிழக அரசின் திறமையற்ற வாதத்தினால் கேரளத்திற்கு சாதகமாக செல்லும் நிலைமை ஏற்பட்டு உள்ளது . இதன் ஒரு பகுதி தான் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது.

இந்த சூழ்நிலையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது . மாற்றங்களை உருவாக்குமா ? உண்ணாவிரத போராட்டம் .

கலாச்சாரத்தின் அடையாளமா தாலி ?

திருமணத்தின் போது மாப்பிளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது நம்மிடையே இருந்து வருகிற மரபு . அவரவர் வழக்கப்படி தாலி கட்டுவது நடந்து வருகிறது . பெரும்பான்மையானோர் தாலியை புனிதமாக கருதி வருகின்றனர் . திருமணம் ஆனதற்கு அடையாளமாக தாலி பெண்ணின் கழுத்தில் தாலி இருக்கிறது . சில வாரங்களுக்கு முன்னால் விஜய் டிவியில் நீயா? நானா ?நிகழ்ச்சிகள் இந்த தலைப்பில் விவாதித்திருந்தார்கள் அதனுடைய தாக்கம் தான் இந்த பதிவு .

தாலி கட்டும் பழக்கம் தவிர்க்க முடியாத ஓன்று என்று இருந்த் கால கட்டம் மாறி இன்று மிக பெரிய விவாத களம் திறக்க பட்டிருக்கிறது . தந்தை பெரியார் காலத்திலேயே தாலி மீதான விவாதம் துவங்கி தந்தை பெரியார் தாலியை எதிர்த்து , இது பெண்ணடிமை தனத்திற்காக கொண்டு வரப்பட்டது . பெண்ணுக்கு தாலி கட்டுவதில் ஆணாதிக்கம் தான் மேலோங்கி நிற்கிறது என்று தாலி இல்லாத சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தார் .

தந்தை பெரியார் உட்பட பலரும் சமூக மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றாலும் அந்த காலங்களை விட இன்று மூட நம்பிக்கைகள் அதிகமாகி விட்டன . இன்றைய காலகட்டங்களில் மனிதர்களின் பேராசைகளால் மூட நம்பிக்கைகள் அங்கீகாரம் பெற தொடங்குகின்றன . வீடு கட்டுவது முதல் பெயர் வைப்பது வரை .


தாலி கட்டுவது என்பது ஆணாதிக்கத்தால் பெண்களுக்குள் திணிக்க பட்ட ஒரு மூட நம்பிக்கை தான் . திருமணம் ஆனவர்கள் அந்த தாலி பெண்ணின் கழுத்தில் இருக்கும் வரை கணவன் ஆரோக்கியமாக இருப்பதாக நம்புகிறார்கள் . கடந்த பல நூற்றாண்டுகளாக தாலி விவகாரத்தில் மக்களை வேறு எதையும் சிந்திக்காத வண்ணம் மூடர்களாகவே வைத்திருக்கிறார்கள் .

தாலி வந்ததன் காரணமே ஆண்களின் சுயநலமே இன்று வழக்கத்தில் உள்ள மொழி " தாலி பெண்ணின் வேலி" என்ன வேலி அந்த வேலி ஏன் ஆணுக்கு இல்லை . நாம் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நமக்கு அமைய பேகும் பெண் என்றுமே நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் தாலி .

தாலி மீதான புனிதம் , சாஸ்திரங்கள் ஏழைகளுக்கு இல்லாமல் போய் விடுகிறது . திருமணத்தின் போது தங்கத்தில் தாலி செய்து போட்டு கொள்கிறார்கள் . பின்னர் பண தேவைகள் வரும் போது அந்த தாலியை கழற்றி அடகு வைக்கவும் தயங்கவில்லை . அப்படிப்பட்ட மக்களுக்கு தாலி என்றால் கஷ்டத்தை தேவைக்கு பயன் பட்டதே என்று தான் இருக்கும் . இன்றைய சினிமாக்கள் அனைத்துமே தாலிக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது . மறைந்திருந்தோ , மயக்கத்தில்ருக்கும் போதோ அந்த பெண்ணுக்கு தெரியாமலோ , விருப்பம் இல்லாமலோ தாலி கட்டி விட்டால் அந்த பெண் அவனோடு வாழ வேண்டும் என்ற கேவலமான காட்சிகளை சினிமாக்கள் காட்டுகின்றன .

இன்று மக்கள் கலாச்சாரம் எது என்றே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் . ஆனால் அதை தான் கலாசாரம் என்றும் சொல்லி வருகிறார்கள் . ஆண்களும் மனைவியின் கழுத்தில் கிடக்கும் தாலி மீது வைக்கும் நம்பிக்கையை மனைவியின் மீது வைக்கவில்லை .பெண் எப்போது சமூகத்தில் தனக்கு வரும் பிரச்சனைகளையும் தானே எதிர் கொள்கிறாளே அன்றும் , சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான உரிமைகள் வரும் போதும் தாலி என்பதே காணாமல் போய்விடும் .

இளங்கோவனை பார்த்து பயந்தார்களா ? கருணாநிதி கும்பல்


இந்தியாவிலே ஊழலில் முதலிடத்தில் இருப்பது கருணாநிதி தலைமையிலான திமுக தான் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை . முல்லை பெரியாறு ஆணை விவகாரத்தில் கேரளாவிற்கு ஆய்வு பணிக்கு அனுமதி கொடுக்கும் வரை கண்டு கொள்ளாமல் ( தெரியாமலிருந்திருக்குமோ ) இருந்து விட்டு எதிர் கட்சிகள் போராட்டம் நடத்திய பின்னர் வேண்டா வெறுப்பாக உச்ச நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற மனு தாக்கல் செய்து வழக்கை வாதாட தெரியாமல் தமிழகத்திற்கு பாதகமான இடைக்கால தீர்ப்பை வாங்கிய பெருமை கருணாநிதிக்கே சாரும் .

மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க ஆடிய நாடகம் தான் மதுரையில் நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை எதிர்த்து கண்டன கூட்டம் என அவசர கோலத்தில் பின் விளைவுகளை பற்றி அறியாமல் அறிவித்தார் . முசோலினி வம்சா வழியில் வந்த சோனியா விடுவாரா கடந்த முறை கூட்டு சேர்ந்து கொள்ளையடித்த ஸ்பெக்த்ராம் ஊழலை தோண்ட முடிவெடுத்து தடா புடலாக cpi ராஜாவின் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தியது . 22000 கோடி ருபாய் அளவிற்கு ராஜா அமைச்சரவையின் கீழ் ஊழல் நடந்திருப்பதாக வழக்கு பதிவு செய்ய பட்டது .

இதை பார்த்த திமுக கொள்ளை கும்பல் பயந்து போனது வண்டவாளம் எல்லாம் வெளியில் வரும் என நினைத்து . இதனிடையே போதுக்கூட்ட்டத்தில் பேசிய தமிழ் விரோதி இளங்கோவன் திமுகவின் ஊழலை எதிர்த்து காங்கிரஸ் காரர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என பேசினார் . இதை எதிர் பார்க்காத திமுக கூட்டம் அவசர அவசரமாக கண்டன கூட்டம் நடை பெறாது என்றது .

இப்படி தான் நாடகமாடி சோனியாவுக்கு பல்லாக்கு தூக்கி 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் ஈழத்திலே சாவதற்கு காரணமாகி போனார் கருணாநிதி . ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திலே காங்கிரஸ் கட்சிக்காக அந்த திட்டத்தையே கானல் நீராக்கி மூன்று மாவட்ட மக்களின் குடிநீரில் உலை வைத்தார் . இப்போது 22000 கோடி பணத்திற்காக ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக செயல் படுகிறார் .

தமிழகத்தின் இயற்கை துறைமுகமான குளச்சலில் துறைமுகம் ஏற்படுத்த மக்கள் விடுத்த கோரிக்கை கூட காற்றில் பறந்து கேரளா மாநிலத்திற்கு சென்று விட்டதாக தெரிகிறது .

இப்படியே நாள் முழுக்க சிந்த்தித்து தன் குடும்பத்திற்கு மட்டுமே உழைத்து கொண்டு ஒட்டு மொத்த தமிழினத்தின் எதிர் காலத்தை கேள்வி குறியாக்கிய கருணாநிதிக்கு தமிழர்கள் என்ன கைம்மாறு செய்ய போகிறார்களோ . முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளா முதல்வர் அச்சுதானந்தன் பாராட்ட வேண்டிய அளவிற்கு கருணாநிதி நடக்கிறார் என்பது கேரளா மாநில மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம் .

இதே நிலை நீடித்தால் ஒட்டு மொத்த தமிழனின் நிலை .....................