• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Saturday

மாற்று அணிக்கான துவக்கம் திருப்பூரில் இருந்து நேரடி ஒளிபரப்பு

மாற்று அணிக்கான துவக்கத்தை தமிழருவிமணியன் துவங்கியிருக்கிறார் . இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தோழர் நல்ல கண்ணு , மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் தோழர் ராம கிருஷ்ணன் , வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர் . இப்போது வைகோ பேசி கொண்டிருக்கிறார் .


நேரடி ஒளிபரப்பை காண



Watch live streaming video from tamil24news at livestream.com
Read More

Friday

முல்லை பெரியாறு அணை போராட்ட களம் காண வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு

தமிழகத்தின் ஐந்து மாவட்ட வாழ்வாதாரத்தை காக்க நாள் தோறும் லட்ச கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கின்றனர். நம்மில் பலர் இந்த போராட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்க வில்லையே என்ற கவலை இருக்கும்.   முல்லை பெரியாறு அணையில் நம் பக்க நியாயங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

பாராமுகமாய் இருக்கும் மத்திய மன்மோகன் அரசுக்கு ஓட்டு மொத்த தமிழர்களும் அணையை காக்க உணர்வுடன் போராடுகிறார்கள் என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழகத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்ட காள்புணர்வே கேரளா ஆட்சியாளர்களின் மன நிலை முல்லை பெரியாறு அணையை மட்டும் கைப்பற்றி விட்டால் ஐந்து மாவட்ட மக்களின் எதிர் காலத்தையும் தலைமுறையையும் வறுமைக்கு கொண்டு செல்ல சிறிது சிறிதாக திர்ட்டமிடுகிறது கேரளம். 

மக்கள் மத்தியில் நாளை வரும் ஆபத்துக்களை அயராது தளராது விளக்கி வைகோ, அப்பாஸ்   , நெடுமாறன் போன்றோர்களின் பிரச்சாரங்கள் தான் இன்று மக்களை தன்னெழுச்சியாக போராட வைத்திருக்கிறது. இன்று இளைஞர்கள் முதல் எல்லா தரப்பும் முல்லை பெரியாறு அணையை காக்க உறுதி எடுத்திருப்பதை நினைக்கும் போது தமிழகம் உணர்வினை இழந்து போகவில்லை என்ற நிம்மதி கிடைக்கிறது. 

முல்லை பெரியாறு அணையை காக்க என் பங்கிற்கு என்ன செய்யலாம் என நினைத்தது கொண்டிருக்கும் தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட நல்லோர்களுக்கு போராட்டத்தில் பங்கு பெற ஒரு வாய்ப்பு . கீழ் வரும் அலைபேசி எண்ணில் உங்களுடைய அலைபேசி மூலம் ஒரு தவறிய அழைப்பு (Missed Call )கொடுங்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடம் சொல்லி தவறிய அழைப்பை கொடுக்க வையுங்கள் . நம் எதிர் பார்ப்பு ஒரு கோடி அழைப்புகள் இதன் மூலம் ஓட்டு மொத்த தமிழகமும் அணையை காக்க உறுதியாக இருக்கிறது என்பதை உணர்ச்சியற்ற மத்திய அரசுக்கு நம் உணர்வுகளால் தெரிவிக்க முடியும். 

செயல் படுங்கள் தோழர்களே தவறிய அழைப்பு விடுங்கள் மறந்தும் தவறிய அழைப்பு(Missed Call) விட தவறி விடாதீர்கள். காலம் தாழ்த்த வேண்டாம் இன்றே செய்வோம் இப்போதே செய்வோம் . Missed Call கொடுக்க வேண்டிய அலை பேசி எண் -  928    1000 152. 
Read More

Wednesday

முதலமைச்சராக முன்னிறுத்தப்பட வேண்டியவர் வைகோ:தமிழருவி மணியன்

மிழகத்தில் புதிய அரசியல் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் காரியங்களை தமிழருவி மணியன் தொடங்கி இருக்கிறார். காந்திய மக்கள் இயக்கத் தலைவரான மணியன், 'அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அணியை உருவாக்கப் போகிறேன்’ என்று களம் இறங்கி உள்ளார். அதற்கான முதல் கூட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் திருப்பூரில் கூட இருக்கிறது.

ஜனவரி 7-ம் தேதி கூடும் அந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்

ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரை ஒரே மேடையில் பேசவைக்க இருக்கிறார். இந்த நிலையில் தமிழருவி மணியனை சந்தித்தோம்.

''ஜெயலலிதா ஆட்சி அமைந்து ஆறு மாதங்களே கடந்துள்ள நிலையில், மாற்றாக ஓர் அணியை உருவாக்க வேண்டிய அவசர அவசியம் என்ன?''

''தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, என் எழுத்தையும் பேச்சையும் பயன்படுத்தினேன் என்பதைவிட... மக்கள் விரோத ஊழல் நிறைந்த தி.மு.க. ஆட்சியை, எந்த அரசியல் நெறிமுறைக்கும் உட்படாத தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். அதற்கு 30 சதவிகிதம் வாக்கு வங்கி உள்ள அ.தி.மு.க-வை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம். பெரிய தீமையை அகற்ற சிறிய தீமையுடன் சமரசம் செய்ய வேண்டி இருக்கிறது. ஜெயலலிதா எவ்வித மாற்றத்துக்கும் உட்படாதவர் என்பதைத் தேர்தலுக்கு முன்பே நான் சொல்லி இருக்கிறேன். சிறுத்தையின் உடம்பில் உள்ள புள்ளிகள், சாகும் வரை எப்படி மறையாதோ, அதைப் போல ஜெயலலிதாவின் பண்பு நலன்கள் இறுதிவரை மறையாது. 'சசிகலா என்கிற இரும்புக் குண்டைக் காலில் கட்டிக்கொண்டு இருக்கும் ஜெயலலிதாவால் நேர்மையாகவும் உண்மையாகவும் வேகமாகவும் செயல்பட முடியாது’ என்று முன்பு எழுதினேன். இப்போது சசிகலா வட்டாரம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால், தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியலுக்கு இது மட்டுமே போதாது என்பதால், இந்த மாற்று அணிக்கான முயற்சியில் இறங்கி உள்ளேன்!''

''அது எப்படி சாத்தியம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்?''

''அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்தும், அரசின் தவறான நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தியும், ஒரே மேடையில் தொடர்ந்து ஓர் அணியில் நின்று போராட, அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத கட்சிகள் முன்வர வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், முதலமைச்சராக முன்னிறுத்தப்பட வேண்டியவர் வைகோ. முதலில், ம.தி.மு.க., இடதுசாரி இயக்கங்கள் பொதுத்திட்டத்தின் அடிப்படையில் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து போராட வேண்டும். இந்த அணி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத அணி. ஊழல் மலிந்த கட்சிகளுக்கு மாற்றாக இவர்களால் இருக்க முடியும். மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

ஜனவரி 7-ம் தேதி எங்கள் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா, தமிழக அரசியலில் மாற்று அணியை உருவாக்கும் கால்கோள் விழாவாக நடத்தப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உட்பட்ட கட்சிகள் இந்த மாற்று அணியை இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும்.''

''உங்களுக்கு முன்பே பா.ம.க. மாற்று அணி கருத்தைச் சொல்லி இருக்கிறதே?''

''பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் இயக்கமாக வளர்ந்து ஒரு குடும்பத்தின் நலன் காக்கும் சாதாரணக் கட்சித் தலைமையாக அது சரிந்து விட்டது.

மருத்துவர் ராமதாஸின் அறிக்கைகளில் உள்ள சமுதாய உணர்வு, அவரின் கட்சியில் அவர் காட்டும் அணுகுமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் அரங்கில் நம்பகத்தன்மையை இழந்து விட்டவர் ராமதாஸ். எனவே, பா.ம.க. தலைமையில் அணி அமைந்து ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது பார்வையற்றவர் தடியை ஊன்றி, எவரெஸ்ட் சிகரம் ஏறிவிட முடியும் என்பதைப் போலத்தான்.''

''மாற்று அணியில் விஜயகாந்துக்கு இடம் இருக்கிறதா?''

''இரண்டு பெரிய கட்சிகளிலும் இடம் இல்லாதவர்கள் எல்லாம் முக்கியத்துவம் தேடி வந்து சேர்ந்த இடம்தான் தே.மு.தி.க. விஜயகாந்தின் மனைவியும் மைத்துனரும்தான் அந்தக் கட்சியின் விதியை நிர்ணயிக்கிறார்கள். போஸ்டர், கட் அவுட் வைப்பதில் இருந்து, துதி பாடுவது வரை இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இவர்கள், எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை. அது, எந்த சித்தாந்தத்தாலும் கட்டப்பட்ட கட்சி அல்ல. விஜயகாந்த் எனும் மனிதரின் விளம்பரத்தில் மட்டும் குளிர் காயும் அந்தக் கட்சி, இதுவரை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் இயங்கவில்லை. ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பாதிக்கக்கூடிய முல்லைப் பெரியாறு பிரச்னையில் சட்டமன்றத் தீர்மானம் இயற்றும் கூட்டத்துக்குக்கூட, மிகத்தாமதமாக வந்த ஒரே தலைவர் விஜயகாந்த். இந்த ஒரு சம்பவமே அவருடைய பொறுப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது. தே.மு.தி.க. என்பது மின்னலைப் போல் தோன்றி புயலைப் போல மறையக்கூடிய ஓர் அரசியல் கட்சி.''

''வைகோவை அதிகப்படியாக முன்னிறுத்துகிறீர்களே?''

''அகத்திலும் புறத்திலும் தூய்மையான ஒரு மனிதனே ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அந்த இடத்தில் வைகோவைத் தவிர வேறு ஒருவரையும் வைத்துப் பார்க்க முடியவில்லை. அதற்காகத்தான் அவரை மாற்றுத் தலைவராக முன்னிறுத்துகிறேனே தவிர, நான் ம.தி.மு.க-வின் கொள்கைப் பிரச்சாரகனும் இல்லை. எந்தத் தனிமனிதனையும் துதிபாடி வயிறு வளர்க்க வேண்டிய நிலையிலும் நான் இல்லை!''

- இரா. தமிழ்க்கனல்,

படம்: வி.செந்தில்குமார்
Read More

Sunday

ஜெயலலிதாவின் அராஜகம் எல்லை மீறுகிறது .

இன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தி.நகரில் நடக்க இருந்த மாவீரர் நாள் பொதுக் கூட்டம் அதிமுக அரசின் அராஜகத்தால் நிறுத்தப் பட்டுள்ளது. காவல் துறை அனுமதியோடு நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தை ஆதிமுக அரசு தடை செய்திருக்கிறது.  இந்த மாவீரர் நிகழ்வில் வைகோ சிறப்புரை வழங்க இருந்தார்.  

இந்நிலையில் மதியம் முதலே கூட்ட ஏற்பாடுகளை செய்து வந்த மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை கைது செய்திருக்கிறது காவல் துறை. மக்களாட்சியில் அவரவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கும் போது ஜனநாயக ரீதியாக பொதுக் கூட்டம் நடத்த ஜெயலலிதா தலைமையிலான அரசு அனுமதிக்கவில்லை என்றால் இதை விட காட்டு மிராண்டி தனம் வேறு என்ன இருக்க முடியும். 


பூனை கண்ணை மூடி கொண்டு பால் குடிக்குமாம் அப்படி குடிக்கும் பூனை நினைக்கும் நம்மை யாரும் பார்க்க வில்லை என்று. அப்படி தான் இருக்கிறது அதிமுக அரசின் நடவடிக்கைகள் மாவீரர் நிகழ்வை நடத்த விடாமல் இருந்தால் மாவீரர்களை யாரும் நினைவு கூற மாட்டார்கள் என்று ஒரு வேளை ஜெயா நினைக்கலாம். 

ஆண்டுதோறும் உலக தமிழர்களின் ஒப்பற்ற தினமான நவம்பர் 27 யார் தடுத்தாலும் தமிழ் ஈழ விடுதலைக்காக உயிரை கொடுத்த எங்கள் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் மாவீரர்களை நினைக்காமல் இருக்க முடியாது. 

ஒவ்வெரு முறை ஆட்சிக்கு மாறி மாறி வரும் கட்சிகளால் தமிழினத்திற்கு எதிராக தான் செயல் படுகிறார்கள். கடந்த முறை தமிழ் ஈழத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியா துணையோடு கொலை செய்ய பட்ட பொது தமிழின தலைவர் என்று சொல்லும் கருணாநிதியால் கொலைக்கு துணை போக தான் முடிந்தது.          தமிழ் உணர்வாளர்களை சிறையில் அடிப்பதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி செய்து வருகின்றனர்.  

தமிழகத்தை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி ஆட்சி அமைப்பது தான் தமிழகத்திற்கு சாபக்கேடு. தமிழர்களின் உரிமைக்கு பேச முடியவில்லை . ஜெயலலிதா இதையெல்லாம் ஜெயித்து வந்தால் செய்வார் என்பது வைகோவை எப்போது கூட்டணியிலிருந்து நீக்கினாரோ அப்போதே தெரிந்து விட்டது தான். அன்றிலிருந்தே இதே ஜெயா திருந்த வில்லை என்பதை சொல்லியிருக்கிறோம். ஆனால் என்ன செய்வது கருணாநிதி என்னும் விச பாம்பை விரட்ட இன்னொரு விச பாம்பிற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் பாம்பின் விஷம் இப்போது வெளியேறுகிறது. 


மாற்றம் ஓன்று உருவாக வேண்டும் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு எதிராக ஓட்டு மொத்த தமிழ் உணர்வாளர்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சியினர் ஓன்று பட்டு நிற்க வேண்டும். மாற்று அணிக்கான தலைமை நேர்மையாகவும் கொள்கை உறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும். 

தமிழருவி மணியன் சொன்னதை போல் மாற்று அரசியலுக்கான துவக்கம் இன்றே துவங்கட்டும். இந்த மாவீரர் நாளில் தமிழின விடுதலைக்காக உயிரை விட்ட மாவீரர்களுக்கு நாம் செய்யும் கடமையாக மாற்று அரசியல் துவங்கட்டும். 

ஓன்று பட்டு ஜெயாவின் அராஜக ஆட்சியை எதிர்ப்போம்.......

தமிழ் விடுதலைக்கு தங்கள் உயிரை கொடுத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !           
Read More

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் யாருக்கு வாய்ப்பு ?

தமிழக அமைச்சர் கருப்பசாமி மறைந்ததை அடுத்து சங்கரன் கோயில் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது . இன்னும் தேதி அறிவிக்காமலே சங்கரன்கோயில் இடைத்தேர்தல் களம சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது .   

பத்திரிக்கைகளிலும் விவாதங்களிலும் சங்கரன்கோயில் இடைத்தேர்தல் சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது . அதற்கான காரணம் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடாத மதிமுக சங்கரன்கோயில்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இடைத்தேர்தலுக்கு புதிய இலக்கணத்தை வகுத்து தமிழகத்தில் மோசமான முன்னுதாரணத்தை காட்டியது .  "திருமங்கலம் பார்முலா" என்று மோசடி வெற்றிக்கே முன்னுதாரணம் திமுக என்பதை இடைத்தேர்தல்கள் வரும் போது  நினைவு படுத்தாமல் இருக்க முடியாது . 

திமுகவிற்கு சிறிதும் சளைத்தது அதிமுக அல்ல என்பதை காட்டும் விதமாக வெற்றி பெற்றவுடன் தன்னுடைய பழைய அதே குணாதிசயங்களை கொண்டு அதே ஆணவத்தோடு ஆட்சி நடத்தி வரும் அதிமுக இந்த தேர்தலில் திமுகவின் "திருமங்கலம் பார்முலாவை " கடை பிடிக்க கூடும்.   
இந்த தொகுதிக்கு அதிமுக தன்னை தயார் படுத்தும் விதமாக இலவச மிக்சி , கிரைன்டர்கள்  அமைச்சர்கள் முன்னிலையில் இந்த தொகுதியில் கொடுக்க துவங்கி விட்டார்கள். இடைத்தேர்தலுக்கு முன்பு அணைத்து வீடுகளுக்கும் கொடுத்து முடிக்க வேண்டும் என்பது மேலிட உத்தரவாம் . 

இந்த நிலையில் நேரடியாக அதிமுகவோடு களத்தில் குதிக்கிறது மதிமுக. இந்த தொகுதியின் ஒரு சிறப்பு என்னவென்றால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த தொகுதி. இப்போதே இடைத்தேர்தலை சந்திக்க மதிமுக களத்தில் இறங்கி விட்டது. ஒன்றிய வாரியாக செயல் வீரர்கள் கூட்டம் கூட்டி தேர்தல் பற்றிய ஆலோசனைகள் நடந்து வருகிறது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடாமல் இருந்ததால் நடுநிலையாளர்கள் மத்தியில் மதிமுவிற்கு நல்ல வரவேற்பு இருந்ததை காண முடிந்தது . அதே போல் உள்ளாட்சி தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிட்டு எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை பெற்று அதிமுக திமுகவிற்கு அடுத்த படியான இடங்களை போட்டியிட்ட இடங்களில் பெற்றிருக்கிறது. 

சங்கரன்கோயில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கட்சிகள் வாங்கிய ஓட்டுகளை அடிப்படையாக வைக்கும் போது ஓரளவிற்கு போட்டியில் யார் இருக்கிறார்கள் என்பதை கணிக்க முடியும். சங்கரன்கோயில் தொகுதியில் ஒரு நகராட்சி இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் ஒரு பேரூராட்சி உள்ளன . இதில் அதிக வாக்குகளை கொண்ட குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மதிமுக தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது . இன்னொரு ஊராட்சி ஒன்றியமான  மேலி நிலித நல்லூர்      ஒன்றியத்தில் அதிமுகவிற்கு அடுத்த இடத்தில் மதிமுக வாக்கு சதவீதங்கள் பெற்றிருக்கிறது. மதிமுகவிற்கு அடுத்து தான் திமுக தேமுதிக போன்ற கட்சிகள் வருகின்றன.  

மேலும் ஒரு பேரூராட்சி இந்த தொகுதியில் இருக்கிறது அந்த பேரூராட்சியில் மதிமுக வெற்றி பெற்றிருக்கிறது . மற்றும் சங்கரன்கோயில் நகராட்சியும் இந்த தொகுதியில் தான் வருகிறது. சங்கரன்கோயில் நகராட்சியில் இந்த தேர்தலில் மதிமுக சொல்லும்படியான வாக்குகள் வாங்க வில்லை . அங்கு போட்டியிட்ட வேட்பாளர் சரியில்லாததால் வாக்குகள் பெரிய அளவில் விழ வில்லை என சொல்லப்படுகிறது .
உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதங்களை பார்க்கும்  போது அதிமுக முதல் இடத்திலும் மதிமுக இரண்டாவது இடத்திலும் திமுக மூன்றாவது இடத்தில் வருகிறது. இது தான் மதிமுகவினருக்கு உற்சாகம் கொடுத்திருக்கிறது. ஒரு சில சதவீதங்கள் மாறி மதிமுகவிற்கு வந்தாலே மதிமுக வெற்றி பெற்று விடும் என்று கணக்கு போடுகின்றனர்  மதிமுகவினர்.  

இப்போதைய சூழ்நிலையில் அதிமுக அரசு மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். மக்கள் நல பணியாளர்கள் நீக்கம், பஸ் கட்டணம் , மின் கட்டண உயர்வு , பால் விலை உயர்வு போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளின் அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கலாம். மக்கள் எதிர்ப்பை காட்ட இந்த தேர்தலை பயன் படுத்தினால் மதிமுக வெல்வது உறுதி.      
Read More

Send your Status to your Facebook