முல்லை பெரியாறில் தமிழர் உரிமை காக்க வைகோ தலைமையில் உண்ணாவிரதம்

முல்லை பெரியாறில் தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய ஆணை கட்ட முதற் கட்ட பணிகளை துவக்கிய கேரள அரசையும் , ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய தமிழர் விரோத காங்கிரஸ் அரசையும் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் மதுரையில் நாளை மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

ஏற்கனவே மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த திமுக பின்னர் ராஜாவின் ஷ்பெக்ட்ராம் ஊழலை மத்திய காங்கிரஸ் அரசு சிபிஐ மூலமாக விரைவு படுத்தி திமுக மத்திய அமைச்சர் ராஜாவின் அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை செய்தார்கள் . இதையடுத்து கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துவதிலிருந்து விலகி கொண்டது திமுக. இப்படி ஊழல் விவகாரங்களுக்காக மக்கள் நலனை காற்றில் பறக்க விடும் திமுக அரசையும் கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் முக்கியமானதாக கருத படுகிறது .

தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்டங்கள் முல்ல்லை பெரியாறை நம்பி தான் விவசாயங்கள் இருக்கிறது . கேரளா அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என வீண் புரளிகளை கிளப்பி விடுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் , இந்திய இறையாண்மையை பற்றியும் கவலை படாமல் செயல் பட்டு வருகிறது . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருந்த வழக்கு தற்போது தமிழக அரசின் திறமையற்ற வாதத்தினால் கேரளத்திற்கு சாதகமாக செல்லும் நிலைமை ஏற்பட்டு உள்ளது . இதன் ஒரு பகுதி தான் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது.

இந்த சூழ்நிலையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது . மாற்றங்களை உருவாக்குமா ? உண்ணாவிரத போராட்டம் .

7 Responses to “முல்லை பெரியாறில் தமிழர் உரிமை காக்க வைகோ தலைமையில் உண்ணாவிரதம்”:

  1. கண்டிப்பாகத் தேவை இந்த போராட்டம். நல்ல இடுகை சுரேஷ்.

  2. இதுக்கெல்லாம் ஒரே வழி. தமிழ்நாட்டிலிருந்து கேரளா போகும் அனைத்தும் (ஒரு பிடி மண் வரை) தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்பதான் சரியா வரும்

  3. its all clear politcs tactice m. karunaanithi does it very inteligently.

  4. வானம்பாடிகள் said...
    கண்டிப்பாகத் தேவை இந்த போராட்டம். நல்ல இடுகை /////


    நன்றி அய்யா

  5. S.A. நவாஸுதீன் said...
    இதுக்கெல்லாம் ஒரே வழி. தமிழ்நாட்டிலிருந்து கேரளா போகும் அனைத்தும் (ஒரு பிடி மண் வரை) தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்பதான் சரியா வரும்////////////


    மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அரசு நினைத்தால் நமது உரிமை பறிபோகாது .............. நன்றி தோழரே

  6. ///மாற்றங்களை உருவாக்குமா ? உண்ணாவிரத போராட்டம் .///

    ம்ம்ம்ம் அதுதான் தெரியலங்க சுரேஷ்.....

    ஆயினும் தேவையான போராட்டம்தான்

  7. Anonymous says:

    added to my rss reader